search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராணி எலிசபெத்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 1983-ம் ஆண்டு மார்ச் மாதம் ராணி 2-ம் எலிசபெத் தனது கணவர் மன்னர் பிலிப்புடன் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டார்.
    • போலீஸ் அதிகாரி மற்றும் போலீசில் பேசிய நபரின் பெயர்கள் திருத்தப்பட்டு உள்ளன.

    வாஷிங்டன்:

    இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ந்தேதி தனது 96-வது வயதில் மரணம் அடைந்தார். இந்த நிலையில் 1983-ம் ஆண்டு அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்ட அவரை கொல்ல முயற்சி நடந்ததாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.

    இது தொடர்பாக ஆவணங்கள், அமெரிக்க மத்திய புலனாய்வு பிரிவின் (எப்.பி.ஐ.) இணையதளத்தில் வெளியிட்டுள்ளன. இதில் ராணி எலிசபெத்தின் அமெரிக்க பயணம் தொடர்பாக சேமிக்கப்பட்ட கோப்புகள் வெளியிட்டு உள்ளது. 1983-ம் ஆண்டு மார்ச் மாதம் ராணி 2-ம் எலிசபெத் தனது கணவர் மன்னர் பிலிப்புடன் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டார்.

    அதற்கு முன்பாக சான்பிரான்சிஸ்கோ போலீஸ் அதிகாரிகளுக்கு வந்த தொலைபேசி அழைப்பில் பேசிய நபர், வடக்கு அயர்லாந்தில் தனது மகள் ரப்பர் புல்லட்டால் கொல்லப்பட்டதாகவும் அதற்காக ராணி எலிசபெத் படகில் செல்லும் போது கோல்டன் கேட் பாலத்தில் இருந்து ஒரு பொருளை வீசி ராணிக்கு தீங்கு விளைவிக்க முயற்சிப்பேன் அல்லது யோசெமிட்டி தேசிய பூங்காவுக்கு அவர் வரும் போது கொல்ல முயற்சிப்பேன் என்று தெரிவித்தார்.

    இதையடுத்து ராணி எலிசபெத் படகு அருகில் வரும் போது பாலத்தின் நடைபாதைகளை மூடுவதற்கு உளவுத்துறையால் உத்தேசிக்கப்பட்டதாக அந்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    யோசெமிட்டி தேசிய பூங்காவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டதா? அல்லது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்பது குறித்து சொல்லப்படவில்லை.

    மேலும் போலீஸ் அதிகாரி மற்றும் போலீசில் பேசிய நபரின் பெயர்கள் திருத்தப்பட்டு உள்ளன. 40 ஆண்டுகளுக்கு பிறகு இந்த தகவல் வெளியாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ராணி எலிசபெத் அணிந்திருந்த கிரீடம் வரலாற்றுச் சிறப்புமிக்கது.
    • இந்த வைரம் இந்தியாவுக்கு சொந்தமானது

    லண்டன் :

    மறைந்த இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் அணிந்திருந்த கிரீடம் வரலாற்றுச் சிறப்புமிக்கது. இந்த கிரீடத்தின் மையப்பகுதியில் 21 கிராம் எடையுள்ள 105 கேரட் கோஹினூர் வைரம் பதிக்கப்பட்டிருந்தது.

    இந்த வைரம் இந்தியாவுக்கு சொந்தமானது, இதுவரை உலகளவில் கண்டுபிடிக்கப்பட்ட வைரங்களில் மிக விலை உயர்ந்தது இந்த வைரம்தான் என சொல்லப்படுகிறது.

    இந்த வைரத்தை இந்தியா மீட்டெடுக்க வேண்டும் என்ற குரல் எழுந்ததும் உண்டு. ஆனால் அதை இந்தியாவிடம் ஒப்படைக்க முடியாது என இங்கிலாந்து ஏற்கனவே கூறி விட்டது. இதையொட்டிய சர்ச்சை இன்னும் தொடர்கிறது.

    தற்போது இந்த வைரம் பதித்த கிரீடத்தை ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு பிறகு அந்த நாட்டின் புதிய ராணியாக மகுடம் சூட்டப்போகும் கமிலா பார்க்கர் அணிவார் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் அப்படி இல்லை.

    மே மாதம் 6-ந்தேதி கணவர் மன்னர் மூன்றாம் சார்லசுடன் மகுடம் சூடப்போகும் ராணி கமிலா பார்க்கர், தனது மாமியார் ராணி இரண்டாம் எலிசபெத் அணிந்த அந்த கிரீடத்தை அணியப்போவதில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன.

    அதற்கு பதிலாக ராணி மேரி அணிந்த கிரீடத்தைத்தான் கமிலா தேர்ந்தெடுத்துள்ளார் என அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்தன.

    அதில் கோஹினூர் வைரம் கிடையாது. அதே போன்ற வேறொரு வைரம்தான் அதில் பதிக்கப்பட்டுள்ளது,

    ராணி கமிலாவின் தலையை அலங்கரிப்பதற்காக அந்த கிரீடம் தற்போது, லண்டன் டவர் கோட்டை கண்காட்சியில் இருந்து திரும்பப்பெறப்பட்டுள்ளது.

    சமீபத்திய வரலாற்றில் ராணி மேரியின் கிரீடத்தை புதிய ராணி ஒருவர் மகுடம் சூட்டுவதற்கு தேர்ந்தெடுத்திருப்பது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது.

    முதலில் மன்னர் சார்லஸின் பாட்டியின் கிரீடத்தைத்தான் ராணி கமிலா பார்க்கர் அணிவார் என ஊகங்கள் எழுந்தன.

    ஆனால் கடைசியில் ராணி மேரியின் கிரீடத்தை ராணி கமிலா பார்க்கர் தேர்ந்தெடுத்திருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

    • இதுவரை வெளியிடப்படாத ராணி எலிசபெத்தின் புகைப்படம் ஒன்றையும் அரச குடும்பம் வெளியிட்டுள்ளது.
    • இந்தப்படம் 1971-ம் ஆண்டு ஸ்காட்லாந்து பால்மோரல் கோட்டையில் எடுக்கப்பட்டதாகும்.

    லண்டன் :

    இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த 8-ந்தேதி மரணம் அடைந்தார். மறுநாளில் நாட்டின் மன்னராக சார்லஸ் அறிவிக்கப்பட்டார். ராணியின் மறைவால் அரச முறை துக்கம் கடைப்பிடிப்பது பற்றி பக்கிங்ஹாம் அரண்மனை ஒரு அறிக்கை வெளியிட்டது.

    அந்த அறிக்கையில், "மாட்சிமை தங்கிய ராணியின் மறைவையடுத்து, அவரது இறுதிச்சடங்குக்கு பின்னர் மேலும் ஒரு வாரம் அரச துக்கம் கடைப்பிடிக்க வேண்டும் என்பது மன்னர் விருப்பம். அரச துக்கம், அரச குடும்பத்தினரால், பணியாளர்களால், படையினரால் கடைபிடிக்கப்படும்" என கூறப்பட்டுள்ளது.

    இதையொட்டி அரச குடும்பத்தினர் எந்தவொரு அதிகாரபூர்வ நிகழ்ச்சியிலும் இன்னும் ஒரு வாரம் பங்கேற்க மாட்டார்கள். இதுவரை வெளியிடப்படாத ராணி எலிசபெத்தின் புகைப்படம் ஒன்றையும் அரச குடும்பம் வெளியிட்டுள்ளது.

    இந்தப்படம் 1971-ம் ஆண்டு ஸ்காட்லாந்து பால்மோரல் கோட்டையில் எடுக்கப்பட்டதாகும். இந்தப்படத்தை அரச குடும்பம், "உங்கள் துயிலுக்காய் பறக்கும் தேவதைகள் பாடட்டும், மாட்சிமை தங்கிய ராணியின் நினைவாக" என்ற வார்த்தைகளுடன் வெளியிட்டுள்ளது. "உங்கள் துயிலுக்காய் பறக்கும் தேவதைகள் பாடட்டும்" என்ற வரிகள், ஷேக்ஸ்பியரின் 'ஹேம்லட்' நாடகத்தில் வரக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ராணி எலிசபெத் உடல் வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்துக்கு கொண்டு செல்லப்பட்டு சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
    • பிரார்த்தனையில் மன்னர் சார்லஸ், இளவரசர்கள் வில்லியம், ஹாரி உள்ளிட்ட அரச குடும்பத்தினர் பங்கேற்றனர்.

    லண்டன்:

    இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் (வயது 96) கடந்த 8-ந்தேதி மரணம் அடைந்தார். பொதுமக்கள் அஞ்சலிக்கு பிறகு நேற்று ராணியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் அரச குடும்பத்தினர் மற்றும் உலக தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த நிலையில் ராணி எலிசபெத் இறுதிச் சடங்கில் அவரது பேரனும், இளவரசருமான ஹாரி அவமரியாதையுடன் நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    எலிசபெத் உடல் வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்துக்கு கொண்டு செல்லப்பட்டு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் மன்னர் சார்லஸ், இளவரசர்கள் வில்லியம், ஹாரி உள்ளிட்ட அரச குடும்பத்தினர் பங்கேற்றனர்.

    அப்போது 'கடவுளே அரசரை காப்பாற்றுங்கள்' என்ற பாடல் பாடப்பட்டது. இதை அரச குடும்பத்தினர் பாடினர். இதில் இளவரசர் ஹாரி மட்டும் அந்த பாடலை பாடவில்லை என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

    பாடல் இசைக்கப்பட்ட போது இளவரசர் ஹாரி அதை பாடாமல் மவுனத்துடன் இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

    இதை சமூக வலைதளங்களில் பலர் விமர்சனம் செய்துள்ளனர். ராணியின் இறுதி சடங்கில் இளவரசர் ஹாரி அவமரியாதையுடன் நடந்து கொண்டதாக பதிவிட்டுள்ளனர்.

    இளவரசர் ஹாரி, அமெரிக்க நடிகையான மேகனை திருமணம் செய்து கொண்ட பிறகு அரச குடும்பத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதன்பின் ஹாரி-மேகன் தம்பதி அமெரிக்காவில் குடியேறினர்.

    அரச குடும்ப உறுப்பினர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இளவரசர் ஹாரி, அரண்மனையில் இருந்து வெளியேறியதாக கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ராணி எலிசபெத் உடலுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு நேரில் அஞ்சலி செலுத்தினார்
    • கடந்த 11-ம் தேதி ராணி எலிசபெத் மறைவுக்கு இந்தியா சார்பில் துக்கம் அனுசரிக்கப்பட்டது.

    லண்டன்:

    இங்கிலாந்து நாட்டின் ராணி 2-ம் எலிசபெத் கடந்த 8-ம் தேதி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

    ராணி எலிசபெத் உடல் கடந்த 13-ம் தேதி இங்கிலாந்து சென்றடைந்தது. லண்டனில் ராணியின் உடலை மன்னர் சார்லசும், ராணி கமிலாவும் பெற்றுக்கொண்டனர். விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் ராணி எலிசபெத்தின் உடல் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

    லண்டனில் வெஸ்ட் மின்ஸ்டர் மண்டபத்தில் ராணியின் உடல் ராஜ மரியாதையுடன், கிரீடத்துடன் வைக்கப்பட்டது. ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளவும், இந்திய அரசின் சார்பில் இரங்கல் தெரிவிக்கவும் ஜனாதிபதி திரவுபதி முர்மு விமானம் மூலம் லண்டன் சென்றார். அவர் ராணி எலிசபெத் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.

    பல்வேறு தலைவர்கள் அஞ்சலி செலுத்தியபின், வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் கடந்த ஆண்டு மறைந்த ராணியின் கணவர் அரசர் பிலிப் அடக்கம் செய்யப்பட்ட இடம் அருகே ராணி எலிசபெத் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

    இந்நிலையில், இங்கிலாந்து ராணி எலிசபெத் உடல் அடக்க நிகழ்ச்சி முடிந்த நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்மு லண்டனில் இருந்து விமானம் மூலம் இந்தியா புறப்பட்டார்.

    • ராணி எலிசபெத் உடல் வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்திற்கு எடுத்து செல்லப்பட்டு இறுதி பிரார்த்தனை செய்யப்பட்டது.
    • இறுதி ஊர்வலத்தின்போது வழிநெடுக்க பொதுமக்கள், ராணிக்கு இறுதி மரியாதை செலுத்தி பிரியாவிடை கொடுத்தனர்.

    லண்டன்:

    பிரிட்டனை நீண்ட காலம் ஆட்சி செய்த மகாராணி இரண்டாம் எலிசபெத் (வயது 97) உடல் நலக்குறைவு காரணமாகவும், வயது மூப்பினாலும் கடந்த 8-ந் தேதி மரணம் அடைந்தார். அவரது உடல் லண்டன் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அரங்கத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. லட்சக்கணக்கான பொதுமக்கள் பல மணி நேரம் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ராணி மேல் வைத்திருந்த அன்பால் நீண்ட வரிசையில் காத்திருந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். ஏராளமானோர் குடும்பம் குடும்பமாக வந்து அஞ்சலி செலுத்தினர்.

    இன்று காலை வரை ராணி எலிசபெத் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டனர். அதன் பிறகு உள்ளூர் நேரப்படி பகல் 11 மணிக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கிற்கான நிகழ்ச்சிகள் தொடங்கியது. இறுதிச்சடங்கில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, அமெரிக்க அதிபர் ஜோபைடன் அவரது மனைவி ஜில் பைடன் உள்பட உலக தலைவர்கள் பங்கேற்றனர்.


    வெஸ்ட்மின்ஸ்டர் அரங்கில் இருந்து அலங்கரிக்கப்பட்ட குதிரைகள் பூட்டிய பீரங்கி வண்டியில் ராணி எலிசபெத் உடல் வைக்கப்பட்டு இறுதி பயணம் தொடங்கியது. ராணி எலிசபெத் உடல் வெஸ்ட் மின்ஸ்டர் அபே தேவாலயத்திற்கு எடுத்து செல்லப்பட்டு இறுதி பிரார்த்தனை செய்யப்பட்டது. அப்போது சவப்பெட்டி மீது ராணிக்கான கிரீடம், செங்கோல் உள்ளிட்டவை வைக்கப்பட்டிருந்தது. பிரார்த்தனைக்குப் பின்னர் அவரது உடல் விண்ட்சர் கோட்டையின் வழியாக செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்திற்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டது. வழிநெடுக்க பொதுமக்கள், ராணிக்கு இறுதி மரியாதை செலுத்தி பிரியாவிடை கொடுத்தனர். கோட்டை மைதானத்தில் இருந்து துப்பாக்கிகள் முழங்க அரச மரியாதை அளிக்கப்பட்டது.

    ஜார்ஜ் தேவாலயத்துக்குள் சவப்பெட்டி கொண்டு வந்ததும், அங்கு கல்லறை ஜெபம் நடைபெற்றது. ஜெபத்தில் மிக குறைந்த எண்ணிக்கையிலான தனிப்பட்ட முறையில் நெருக்கமான விருந்தினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். இந்த ஜெபத்தைத் தொடர்ந்து ராணியின் ஆட்சி நிறைவுறுவதைக் குறிக்கும் சம்பிரதாயங்கள் நடைபெற்றன. ஏகாதிபத்திய அரச மணிமுடி, ராணியின் சிலுவைக் கோளம், செங்கோல் போன்றவை சவப்பெட்டியின் மேலே இருந்து அகற்றப்பட்டன. பிறகு ராணியின் உடல் ராயல் வால்ட்டில் இறக்கப்பட்டு அரச பாரம்பரிய முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது.

    • இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு உள்பட உலக நாடுகளை சேர்ந்த 500 தலைவர்கள் இறுதிச்சடங்கில் பங்கேற்றனர்
    • இறுதி சடங்கினை பொதுமக்கள் பார்க்கும் வகையில் 125 தியேட்டர்களில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

    லண்டன்:

    இங்கிலாந்து மகாராணியாக கடந்த 70 ஆண்டுகள் 214 நாட்கள் இருந்து வைர விழா கொண்டாடி சாதனை படைத்த ராணி எலிசபெத் (வயது 97) உடல் நலக்குறைவு காரணமாகவும், வயது மூப்பினாலும் கடந்த 8-ந் தேதி மரணம் அடைந்தார். அவரது உடல் லண்டன் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அரங்கத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

    கடந்த 5 நாட்களாக லட்சக்கணக்கான பொதுமக்கள் சுமார் 17 மணி நேரத்துக்கும் மேலாக கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ராணி மேல் வைத்திருந்த அன்பால் நீண்ட வரிசையில் காத்திருந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வந்தனர். ஏராளமானோர் குடும்பம் குடும்பமாக வந்து அஞ்சலி செலுத்தினர்.

    இறுதிச்சடங்கில் பங்கேற்க இந்தியா, அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், பாகிஸ்தான், உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 500 தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. ரஷியா, ஆப்கானிஸ்தான், மியான்மர், சிரியா, வட கொரியா ஆகிய நாட்டு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

    ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின், மன்னர் சார்லசை சந்தித்த இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு

    ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின், மன்னர் சார்லசை சந்தித்த இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு

    இங்கிலாந்தின் அழைப்பை ஏற்று இந்தியா சார்பில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் பாகிஸ்தான் உள்பட உலக நாடுகளை சேர்ந்த 500 தலைவர்கள் மற்றும் பல்வேறு நாடுகளை சேர்ந்த மன்னர்கள், தொழில் அதிபர்கள், அரசியல் தலைவர்கள் என 2 ஆயிரம் பேர் லண்டனுக்கு வந்தனர்.

    இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று முன்தினம் லண்டன் வந்தடைந்தார். நேற்று அவர் இந்திய மக்கள் சார்பில் ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் இங்கிலாந்து புத்தகத்தில் கையெழுத்திட்டார்.

    இன்று காலை வரை ராணி எலிசபெத் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டனர். அதன் பிறகு பகல் 11 மணிக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கிற்கான நிகழ்ச்சிகள் தொடங்கியது. இறுதிச்சடங்கில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, அமெரிக்க அதிபர் ஜோபைடன் அவரது மனைவி ஜில் பைடன் உள்பட உலக தலைவர்கள் பங்கேற்றனர்.

    11 நாட்களுக்கு பிறகு வெஸ்ட்மின்ஸ்டர் அரங்கில் இருந்து அலங்கரிக்கப்பட்ட குதிரைகள் பூட்டிய பீரங்கி வண்டியில் ராணி எலிசபெத் உடல் வைக்கப்பட்டு இறுதி பயணம் தொடங்கியது. இந்த இறுதி ஊர்வலத்தில் மன்னர் 3-ம் சார்லஸ், இளவரசர்கள் வில்லியம், ஹாரி மற்றும் அவரது குடும்பத்தினர் ராணுவ வீரர்களுடன் அணிவகுத்து வந்தனர்.

    200 இசைக்கலைஞர்கள் இசை எழுப்பியபடி செல்ல ராணி எலிசபெத்தின் உடல் லண்டனில் புகழ்பெற்ற வீதிகள் வழியாக பக்கிம்காம் அரண்மனைக்கு அருகில் உள்ள வெலிங்டன் ஆர்ச் வரை சென்றது.

    இந்த ஊர்வலத்தில் சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். ரோட்டோரம் திரண்டு இருந்த பொதுமக்கள் தங்கள் மகாராணிக்கு கண்ணீர் மல்க பிரியா விடை கொடுத்தனர்.


    ராணியின் உடல் வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்திற்கு எடுத்து செல்லப்பட்டு இறுதி பிரார்த்தனை செய்யப்பட்டது. அப்போது உடல மேல் கிரீடம் செங்கோல் உள்ளிட்டவை வைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. அதன்பின்னர் அவரது உடல் விண்ட்சர் கோட்டைக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. அங்குள்ள சிறிய தேவாலயத்தில் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது. ராணியின் உடல், அவரது கணவர் பிலிப் அடக்கம் செய்யப்பட்ட இடத்தின் அருகே நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. அவரது பெற்றோரும், சகோதரியும் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இறுதிச்சடங்கு நடைபெறும்போது ஒலித் தொந்தரவு ஏற்படுவதை தடுக்கும் வகையில் ஹிமித்ரோ விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் தரை இறங்கவும், புறப்படவும் தடை விதிக்கப்பட்டு இருந்தது. டிரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டது.

    பிரமாண்டமாக நடந்த இந்த இறுதி சடங்கினை பொதுமக்கள் பார்க்கும் வகையில் 125 தியேட்டர்களில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. மேலும் பூங்காக்கள், ரெயில் நிலையங்கள், ஓட்டல்கள் மற்றும் பொதுஇடங்களில் பெரிய அளவிலான திரைகள் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

    1965-ம் ஆண்டு போர்க்கால பிரதமராக இருந்த வின்ஸ்டன் சர்ச்சிலின் இறுதிச்சடங்கு பிரமாண்டமாக நடந்தது. 57 ஆண்டுகளுக்கு பிறகு லண்டனில் இன்று ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கு அதேபோன்று மிக பிரமாண்டமாக நடந்துள்ளது.

    மன்னர் காலத்தில் நடப்பது போன்று பாரம்பரிய முறைப்படி இந்த இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகள் நடந்தது. ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சி டி.வி. சானல்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனை உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் பார்த்தனர்.

    இறுதி சடங்கையொட்டி பக்கிம்காம் அரண்மனை, பாராளுமன்ற கட்டிடம், வெஸ்ட் மின்ஸ்டர் அபேவை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    • ராணி எலிசபெத் உடலுக்கு இன்று இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.
    • இதையடுத்து அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    லண்டன்:

    இங்கிலாந்து நாட்டின் ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த 8-ம் தேதி உயிரிழந்தார். ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் பண்ணை மாளிகையில் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    ஸ்காட்லாந்தில் இருந்து விமானம் மூலம் இரண்டாம் எலிசபெத்தின் உடல் கடந்த 13-ம் தேதி இங்கிலாந்து சென்றடைந்தது. லண்டனில் ராணி எலிசபெத்தின் உடலை இங்கிலாந்து மன்னர் சார்லசும், ராணி கமிலாவும் பெற்றுக்கொண்டனர். விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் 2-ம் எலிசபெத்தின் உடல் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

    இந்நிலையில் ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கு இன்று காலை 6.30 மணியளவில் நடைபெற உள்ளது. இதனிடையே, ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக உலக நாடுகளின் தலைவர்கள் இங்கிலாந்தில் முகாமிட்டு உள்ளனர்.

    இரண்டாம் எலிசபெத்தின் உடல் லண்டனில் உள்ள வெஸ்ட் மின்ஸ்டர் மண்டபத்தில் மேடையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு தொடர்ந்து 24 மணி நேரமும் மக்கள் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    வெஸ்ட் மின்ட்ஸர் மாளிகையில் இருந்து எடுத்துச் செல்லப்படும் ராணியின் உடல், அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும். இறுதிச்சடங்கை தொடர்ந்து 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட உள்ளதால் லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்திற்கு வந்து செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்படுகின்றன.

    இன்று நடைபெற உள்ள ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கில் உலக தலைவர்கள் உள்பட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட முக்கிய நபர்கள் கலந்து கொள்வார்கள் என்றும், 7 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேல் பொதுமக்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ராணி இரண்டாம் எலிசபெத் இறுதிச்சடங்கினை இங்கிலாந்து முழுவதும் சுமார் 125 திரையிரங்குகளில் ஒளிபரப்பப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

    ராணி எலிசபெத் உடலுக்கு இன்று இறுதிச்சடங்கு நடைபெற உள்ளநிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அங்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    • ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கு இங்கிலாந்து முழுவதும் 100-க்கும் மேற்பட்ட சினிமா தியேட்டர்களில், நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.
    • பூங்கா, சதுக்கம் மற்றும் தேவாலயங்களில் பெரிய திரைகள் அமைக்கப்பட்டு ஒளிபரப்பப்படுகிறது. டி.வி. சேனல்களும் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

    லண்டன்:

    இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த 8-ந்தேதி மரணம் அடைந்தார்.

    அவரது உடல் அடங்கிய சவப்பெட்டி கடந்த 14-ந்தேதி முதல் லண்டனில் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள வெஸ்ட் மின்ஸ்டர் மண்டபத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. பல மணி நேரம் வரிசையில் காத்து இருந்து மக்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

    ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கு நாளை நடக்கிறது. உள்ளூர் நேரப்படி நாளை காலை 6.30 மணி வரை அஞ்சலி செலுத்த மக்கள் அனுமதிக்கப்படுவர். அதன்பின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகள் தொடங்கும். ராணி எலிசபெத் உடல் வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் இருந்து ஊர்வலமாக வெஸ்ட்மின்ஸ்டர் அபேவுக்கு எடுத்து செல்லப்படுகிறது.

    அங்கு ராணியின் கணவர் இளவரசர் பிலிப் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடம் அருகே எலிசபெத் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

    ராணி எலிசபெத் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்படும் போது வழி நெடுகிலும் மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்துகிறார்கள். இதில் 7.5 லட்சம் பேர் திரளுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து லண்டன் நகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கு இங்கிலாந்து முழுவதும் 100-க்கும் மேற்பட்ட சினிமா தியேட்டர்களில், நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது. அதே போல் பூங்கா, சதுக்கம் மற்றும் தேவாலயங்களில் பெரிய திரைகள் அமைக்கப்பட்டு ஒளிபரப்பப்படுகிறது. டி.வி. சேனல்களும் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

    ராணி எலிசபெத் இறுதிச் சடங்கில் 2 ஆயிரம் உலக தலைவர்கள் பங்கேற்கிறார்கள். இதற்காக அவர்கள் லண்டன் நகருக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

    அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று இரவு இங்கிலாந்து சென்றடைந்தார். அவர் சென்ற விமானம் லண்டன் அருகே உள்ள ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்தை சென்றடைந்தது.

    ஜோ பைடன் இன்று ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்துவார் என்றும் இங்கிலாந்து புதிய மன்னர் சார்லசை சந்திப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    ராணியின் இறுதிச் சடங்கில் இந்தியா சார்பில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்கிறார். இதற்காக நேற்று டெல்லியில் இருந்து புறப்பட்ட திரவுபதி முர்மு இன்று அதிகாலை லண்டனில் உள்ள கேட்விக் விமான நிலையத்தை சென்றடைந்தார். அவரை இந்திய அதிகாரிகள் வரவேற்றனர்.

    அதே போல மற்ற உலக நாட்டு தலைவர்களும் லண்டன் நகருக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.

    • இந்தியா சார்பில் ஜனாதிபதி திரவுபதி முர்முவும் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக லண்டன் சென்றுள்ளார்.
    • சினிமா திரையிடல்களுக்கு அனுமதி இலவசம் என சினிமா சங்கம் அறிவித்துள்ளது.

    இங்கிலாந்து நாட்டின் ராணி 2-ம் எலிசபெத் கடந்த 8-ம் தேதி உயிரிழந்தார். அவர் தனது 96-வது வயதில் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் பண்ணை மாளிகையில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

    ஸ்காட்லாந்தில் இருந்து விமானம் மூலம் ராணி எலிசபெத்தின் உடல் கடந்த 13-ம் தேதி இங்கிலாந்து சென்றடைந்தது. லண்டனில் ராணியின் உடலை மன்னர் சார்லசும், ராணி கமிலாவும் பெற்றுக்கொண்டனர். விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் ராணி எலிசபெத்தின் உடல் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு கொண்டு செல்லப்பட்டது. ராணி எலிசபெத் இறுதிச்சடங்கு நாளை நடைபெற உள்ளது.

    ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக உலகத் தலைவர்கள் இங்கிலாந்திற்கு படையெடுத்துள்ளனர். லண்டனில் வெஸ்ட் மின்ஸ்டர் மண்டபத்தில் மேடையில் ராணியின் உடல் ராஜ மரியாதையுடன், கிரீடத்துடன் வைக்கப்பட்டுள்ளது. வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் கடந்த ஆண்டு மறைந்த ராணியின் கணவர் அரசர் பிலிப் அடக்கம் செய்யப்பட்ட இடம் அருகே, ராணியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

    இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளவும், அமெரிக்க அரசின் சார்பில் இரங்கல் தெரிவிக்கவும் தனி விமானத்தில் புறப்பட்ட அதிபர் ஜோ பைடன் லண்டன் சென்றடைந்தார். இதேபோல், இந்தியா சார்பில் ஜனாதிபதி திரவுபதி முர்முவும் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக லண்டன் சென்றுள்ளார்.

    ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கு நாளை நடைபெறவுள்ள நிலையில், பிரிட்டன் முழுவதும் சுமார் 125 திரையரங்குகளில் சடங்கு நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. திரையரங்குகள் மட்டுமின்றி பூங்காக்கள், சதுரங்கள் உள்ளிட்ட பொது இடங்களிலும் சடங்கு நிகழ்வுக்கான காட்சிகளை காண்பிக்க திரைகள் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சினிமா திரையிடல்களுக்கு அனுமதி இலவசம் என சினிமா சங்கம் அறிவித்துள்ளது.

    வெஸ்ட்மின்ஸ்டர் அபே பகுதியில் இறுதிச் சடங்குகள் மற்றும் லண்டன் முழுவதும் நடைபெறும் ஊர்வலங்களும் பிபிசி, ஐடிவி மற்றும் ஸ்கை மூலம் தொலைக்காட்சியில் நேரடியாகக் காண்பிக்கப்படும் என்று கலாச்சாரத் துறை அறிவித்துள்ளது.

    1997-ல் இளவரசி டயானாவின் இறுதிச் சடங்குகள், 2012 லண்டன் ஒலிம்பிக்ஸ் மற்றும் அரச திருமணங்கள் உள்பட சமீபத்திய பிரிட்டிஷ் வரலாற்றின் பிற முக்கிய நிகழ்வுகளை விட கூட்டம் அதிகம் இருக்கும் எனவும் இறுதிச்சடங்கிற்கு அரசாங்கம் பொது விடுமுறையை அறிவித்துள்ளது.

    • ராணி எலிசபெத் இறுதிச்சடங்கு நாளை நடைபெற உள்ளது.
    • ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக உலகத் தலைவர்கள் இங்கிலாந்திற்கு படையெடுத்துள்ளனர்.

    இங்கிலாந்து நாட்டின் ராணி 2-ம் எலிசபெத் கடந்த 8-ம் தேதி உயிரிழந்தார். அவர் தனது 96-வது வயதில் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் பண்ணை மாளிகையில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

    ஸ்காட்லாந்தில் இருந்து விமானம் மூலம் ராணி எலிசபெத்தின் உடல் கடந்த 13-ம் தேதி இங்கிலாந்து சென்றடைந்தது. லண்டனில் ராணியின் உடலை மன்னர் சார்லசும், ராணி கமிலாவும் பெற்றுக்கொண்டனர்.

    விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் ராணி எலிசபெத்தின் உடல் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு கொண்டு செல்லப்பட்டது. ராணி எலிசபெத் இறுதிச்சடங்கு நாளை நடைபெற உள்ளது. ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக உலகத் தலைவர்கள் இங்கிலாந்திற்கு படையெடுத்துள்ளனர்.

    இந்நிலையில், இந்தியா சார்பாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்வதற்காக லண்டன் சென்றார்.

    • தாய்லாந்து அரசர் பூமிபோல் அதுல்யதேஜ், 1927-2016 வரை, 70 ஆண்டுகள், 126 நாட்கள் அரசராக இருந்தார்.
    • பிரிட்டன் ராணி என்று அழைக்கப்பட்டாலும், 16 நாடுகளின் அரசியல் சாசன சட்டப்படி இவர் அரசியாக உள்ளார்.

    லண்டன்

    இரண்டாம் எலிசபெத் ஆட்சி பொறுப்பேற்று 70 ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளது. இதையொட்டி, 2022-ம் ஆண்டை பிளாட்டினம் ஜூபிலியாக, ராயல் அரண்மனை கொண்டாடி வருகிறது. பிரிட்டனின் ராணியாக உள்ள இரண்டாம் எலிசபெத், அரச பணியை ஏற்று, 70 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதன்மூலம் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தை 70 ஆண்டுகள் ஆட்சி செய்த ஒரே மகாராணி என்ற பெருமையை இரண்டாம் எலிசபெத் பெற்றுள்ளார்.

    தாய்லாந்து அரசர் பூமிபோல் அதுல்யதேஜ், 1927-2016 வரை, 70 ஆண்டுகள், 126 நாட்கள் அரசராக இருந்தார். அந்த சாதனையை தற்போது இரண்டாம் எலிசபெத் ராணி அவர்கள் நேற்று முறியடித்து, உலகில் நீண்ட காலம் ஆட்சி செய்த மன்னர் அல்லது மகாராணி என்ற சாதனை படைத்த இரண்டாவது நபர் ஆனார். எலிசபெத் அலெக்சாண்டிரா மேரி என்ற இயற்பெயர் கொண்ட ராணி இரண்டாம் எலிசபெத், தனது தந்தை ஜார்ஜ் இறந்த பிறகு, 1952ம் ஆண்டு பிப்ரவரி 6ம் தேதி, பிரிட்டனின் மகாராணியாக முடிசூடிக் கொண்டார். அப்போது அவருக்கு 25 வயது. 1952ல் நிகழ்ந்த இவரது முடிசூட்டு விழா, உலகளவில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பட்ட முதல் பிரம்மாண்ட நிகழ்வு ஆகும்.

    பிரிட்டன் வரலாற்றில் விக்டோரியா மகாராணி 63 ஆண்டுகாலம் ஆட்சிபுரிந்த நிலையில், அதை முறியடித்து 70 ஆண்டுகள் அரியணையை அலங்கரித்து இரண்டாம் எலிசபெத் வரலாற்று சாதனை புரிந்துள்ளார். இவர் பிரிட்டன் ராணி என்று அழைக்கப்பட்டாலும், 16 நாடுகளின் அரசியல் சாசன சட்டப்படி இவர் அரசியாக உள்ளார்.

    மேலும் 54 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட காமன்வெல்த் எனப்படும், பிரிட்டிஷாரால் ஆளப்பட்ட நாடுகளின் கூட்டமைப்பிலும் பொறுப்பு வகிக்கிறார். இவை தவிர பிரிட்டன் திருச்சபையின் மிக உயரிய கவர்னராகவும் உள்ளார். பிரிட்டன் பிரதமர்களை தேர்வு செய்வதில் ராணியின் பங்கு மிக முக்கியமானதாகும். இவர் இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் இருந்த வின்ஸ்டன் சர்ச்சில் உள்பட 14 பிரிட்டன் பிரதமர்களின் காலகட்டங்களில் அரசியாக பொறுப்பு வகித்துள்ளார். பிரான்ஸ் தேசத்து மன்னர் பதினான்காம் லுாயிஸ், 1643-1715 வரை, 72 ஆண்டுகள், 110 நாட்கள் அரசராக இருந்து, இந்த சாதனை பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×